மஞ்சள் ரோஜா
"நீ வருவாய் என நீ வரும் பாதையில்.... விழி வைத்து காத்து இருக்கிறோம்.. நானும் என்னுடைய காதலும்...", காலையில் பேருந்து நிலையத்தில் பைரவி எப்போது வருவாள் என்று தவிப்புடன் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டு இருந்த போது விக்ரம் மனம் எழுதிய கவிதையை டைரியில் கவிதை எழுதி கொண்டு இருந்தான். முன்பக்கம் டைரியின் பக்கங்களை புரட்டினான், "நான் வைத்த செடியில் இன்று பூத்த மஞ்சள் நிற ரோஜாவை காணவில்லை... அட! அதோ நடந்து வருகிறதே..." என்று நேற்று பைரவி மஞ்சள் நிற சுடிதார் அணிந்து சென்ற போது அவன் மனம் எழுதிய கவிதை. அதற்கு மேல் அவளுடைய நினைவை அவனால் தாங்க முடிய வில்லை.பைரவி.....!!!! அழகான பெயர்...உன்னை போலவே... என்று எண்ணிக் கொண்டு, எழுந்து மொட்டை மாடியில் சுவரில் கையை ஊன்றி கொண்டு எதிரில் இருந்த வீட்டின் மாடியை பார்த்தான். அங்கு பேச்சும் சிரிப்பும் களை கட்டி கொண்டு இருந்தது. திரும்பவும் டைரியை எடுத்தவன், "ஏழு ஸ்வரங்களாக உன் சிரிப்பு சத்தம் ஒலிக்க, ஆயிரம் பேர் சுற்றி இருந்தும், உன் சிரிப்பு சத்தத்தை மட்டும்.... என் மனம் கண்டுபிடித்த மாயம் என்ன?" என்று அவன் எழுதி முட...